நித்தியானந்தா வாழ்க்கை படத்திற்கு கொலை மிரட்டல்

நித்தியானந்தா பற்றி நாங்கள் சொல்லி மக்களுக்கு தெரிய வேண்டியது இல்லை, இந்நிலையில் நித்யானந்தாவை போன்ற சாமியாரின் வாழ்க்கை குறித்த படம் கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் போன்ற மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது.



கன்னடத்தில் ‘யாவரினு’ என்றப் பெயரில் எடுக்கப்பட்ட இப்படம், தமிழில் “சொர்க்கம் என் கையில்” என்ற பெயரில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்படிருக்கின்றன. ஆனால் படம் வெளியிடுவதற்க்கு முயற்சி செய்துவருபவர்களை நித்தியானந்தாவின் ஆட்கள் மிரட்டுவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இப்படம் வெளிவருவதை தடுத்து நிறுத்த பல நடவடிக்கைகள் நடந்தாலும், படக்குழு படத்தை எப்படியாவது ரிலிஸ் செய்யவேண்டும் என்று முயற்சி செய்து வருகிறது.

No comments:

Post a Comment

GOOGLE PAGE

Like Us

Designed By newskolly Sitemap