சென்னை: அஜீத் படத்திற்கு தனது லத்திகா பட பிஜிஎம்மை தருவதாக பவர் ஸ்டார் சீனிவாசன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நான் தான் பவர், சூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக வந்துள்ள பவர்ஸ்டார் என்று சீனிவாசன் மைக் போட்டு கூவியபோது எல்லாம் அதை யாரும் காதில் வாங்கவில்லை. யாருடா இவரு காமெடி செய்கிறார் என்று மக்கள் சென்றனர். இந்நிலையில் சந்தானம் ஒரே படத்தின் மூலம் பவரை பட்டிதொட்டி எல்லாம் பிரபலமாக்கிவிட்டார்.
ஆமாம், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை பற்றி தான் கூறுகிறோம். அதன் பிறகு பவர் தனது பெயர் அவ்வப்போது செய்தியில் அடிபடுமாறு பார்த்துக் கொள்கிறார். மனிதருக்கு பிஆர்ஓவே தேவை இல்லை. அந்த அளவுக்கு ரூம் போட்டு யோசித்து எதையாவது கூறி செய்தியில் இடம்பிடித்துவிடுகிறார். இந்நிலையில் அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஹீரோ #சூர்யா கத்தி பிஜிஎம்மை பயன்படுத்தினார் நகைச்சுவை நடிகர் #ராஜேந்திரன் வீரம் பிஜிஎம்மை பயன்படுத்தினார் மை டியர் தல உங்களுக்கு என் லத்திகா பட பிஜிஎம்மை தர தயாராக உள்ளேன் கவலைப்படாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment