போதையில் தள்ளாடிய நடிகை கிரண்...! - பிக்கப்... ட்ராப்... எஸ்கேப்.. ஆன நடிகர் சதீஷ்

ரணின் ‘ஜெமினி’ படத்தில் விக்ரம் ஜோடியாக அறிமுகமானவர் தொடர்ந்து பிரசாந்த் உடன் ‘வின்னர்’, கமலுடன் ‘அன்பே சிவம்’ என ஒரு சில படங்களில் நடித்தார். நடித்த படங்களில் ஒன்றிரெண்டு ஹிட்டானாலும் தமிழில் வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். எத்தனை மொழிகளில் எத்தனை படங்களில் நடித்து என்ன புண்ணியம். எதுவுமே அவருக்கு பேர் சொல்லும் படங்களாக அமையவில்லை.

இதனால் வருத்தத்தில் உச்சத்துக்கே போனவர் அப்படியே வீட்டில் உட்கார்ந்து தூங்கி வழிந்து இஷ்டத்துக்கு உடம்பை பெருக்க வைத்தார். இருந்தாலும் சினிமா ஆசை விடாதவர் கோலிவுட்டில் வாய்ப்பு தேடி வந்தவருக்கு இப்போது சுந்தர்.சி தனது ஆம்பள படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இதே படத்தில் தான் ரிட்டயர்டு நடிகை சிம்ரனும் இருக்கிறார்.

மேற்படி படப்பிடிப்புக்கு வந்துபோன கிரண் பகல் முழுக்க உயிரைக் கொடுத்து நடிப்பாராம். சாயங்காலம் பேக்கப் சொன்னதும் தனது கேரவனுக்குள் சென்று சில, பல பெக்குகளை உள்ளே தள்ளி (அதாங்க சரக்கு) அங்கேயே மட்டையாகி விடுவாராம். எழுந்து நடக்கக் கூட முடியாத அளவுக்கு போதையின் உச்சத்தில் இருக்கும் அவரை காமெடி நடிகர் சதீஷ் தான் அவருடைய ஹோட்டல் ரூம் வரை ஷேப்பாக இறக்கி விட்டு வருவாராம்.

கிரண் நடிக்க வந்த அத்தனை நாட்களும் ‘ஆம்பள’ பட யூனிட்டே போதையில் தள்ளாடாத குறை தான். இந்த ரகசியத்தை மனசுக்குள் வைத்துக் கொள்ள முடியாத சதீஷ் யூனிட்டில் உள்ளவர்களிடம் சொல்லி சிரித்திருக்கிறார். அதைக்கேட்ட யூனிட்டோ ஹெல்புக்கு எங்களைக் கூப்பிட்டிருந்தா நாங்களும் வந்திருப்போம்ல.. என்று சதீஷை கலாய்த்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

GOOGLE PAGE

Like Us

Designed By newskolly Sitemap