காதலை பிரிப்போர் சங்கம் : KPS : எப்படி தான் யோசிகிராங்களோ

சேலம் மாவட்டம் ஓமலூரில் ஒரு வித்தியாசமான சங்கம் திறந்துள்ளனர். அது காதலைப் பிரிப்போர் சங்கமாகும். வருத்தப்படாத வாலிபர் சங்கம்  பட பாணியில் இந்த காதலைப் பிரிப்போர் சங்கத்தை திறந்துள்ளனர் அங்குள்ள சில குசும்புக்கார இளைஞர்கள். சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கொங்குப்பட்டி மணியக்காரணூர் பகுதியில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து காதலை பிரிப்போர் சங்கம் என்று பிளக்ஸ்பேனர் வைத்து உள்ளனர். இந்த சங்கத்திற்கு தலைவர், செயலாளர், பொருளாளர் என்று பொறுப்புகள் வழங்கி உள்ளனர்.

பிரபு என்பவர் தலைவராகவும், சந்தோஷ் செயலாளராகவும், துணைத் தலைவர் உதயா என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மன்ற உறுப்பினர்களாக 7 பேர் உள்ளனர். மொத்தம் 13 பேர் இருப்பதாக தெரிகிறது. இந்த சங்கத்தின் கொள்கை என்ன என்று தெரியவில்லை. ஆனால் அந்த பிளக்ஸ் பேனறில், 

ஊர்ல தப்பு நடக்கனும்.. ஆனா அதை நாங்க மட்டும்தான் பண்ணனும்

 
என்று பன்ச் வைத்துள்ளனர். மேலும் ,

வேணாம் மச்சான் சேட்டை, இது மணியக்காரனூர் கோட்டை

என்றும் கூறியுள்ளனர். வாட்ஸ் ஆப்பிலும், பேஸ்புக்கிலும் இப்போது இவர்களைப் பற்றியப் பேச்சாக உள்ளது.

நீங்க நல்லா வருவீங்க டா!!

No comments:

Post a Comment

GOOGLE PAGE

Like Us

Designed By newskolly Sitemap